திருச்சி தொகுதியில் பம்பரமும் சுத்தாது குக்கரும் விசில் அடிக்காது இரட்டை இலை மட்டுமே துளிரும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சுத்தாது குக்கர் விசில் அடிக்காது இரட்டை இலை மட்டுமே துளிரும் என அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அவர் நேற்று வேப்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில்  அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாதுகூட்டணி கட்சி நிர்வாகிகளான  தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேட்பாளர் கருப்பையா தனக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தர வேண்டும் பொது மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி நாடாளுமன்ற தொகுதி நமக்கு சாதகமாக உள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பம்பரம் சுத்தாது குக்கர் விசில் அடிக்காது ஆனால் இரட்டை இலை துளிர்வது உறுதி என்றார். விஜயபாஸ்கரின் பேச்சை கேட்ட  அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  விசில் அடித்து ஆரவாரம் செய்து    அவரது பேச்சை  வரவேற்றனர்.