பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்தது : சிவகங்கையில் ப.சிதம்பரம் பேச்சு

பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்த அரசு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை அறிமுகம் செய்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், “இந்தியா கூட்டணி சிறுபான்மை, தலித் சமுதாயத்தை நிச்சயமாக பாதுகாக்கும் என்ற உறுதியை நான் தருகிறேன். பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்தது நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு. அரசியல் சாசனத்தை திருத்தி ஓபிசி மக்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தந்தது காங்கிரஸ் அரசு.

பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பெற்று தந்தது காங்கிரஸ் அரசு. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு இதுபோன்று பின்தங்கிய மக்களுக்கு ஏதாவது ஒன்றை செய்துள்ளதா? பின்தங்கிய மக்களுக்கு அரணாக இருந்தது காங்கிரஸ் கட்சி; காங்கிரஸ் அரசு. மகளிர் உரிமை தொகை வழங்குவது, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித் தொகை, காலை சிற்றுண்டி வழங்குவது சமூகநீதி. பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்தது. நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்” என்று  தெரிவித்தார்.