வல்லத்திராகோட்டை பள்ளி மற்றும் பச்சை பூமி இணைந்து வழங்கிய மஞ்சள் பை விழிப்புணர்வு, நெகிழிப்பை ஒழிப்பு நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, வல்லத்திராகோட்டை மற்றும் பச்சை பூமி அமைப்பின் சார்பில் நெகிழிப்பை ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை விழிப்புணர்வு பற்றிய  நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் நெகிழிப்பை ஒழிப்பின் அவசியம் குறித்தும் மஞ்சள் பை உபயோகத்தின் அத்தியாவசியத் தேவை குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசினார். உதவித் தலைமை ஆசிரியர் குணசேகரன், ஆசிரியர் கார்த்திக்கேயன், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மஞ்சள் பைகளையும் புத்தகங்களையும் வழங்கினார்கள். ஆங்கில ஆசிரியர் ஆன்டனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.