+2 பொதுத்தேர்வில் கடையநல்லூர் தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நூற்றாண்டை கடந்த தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத்தேர்வில், தேர்வு எழுதிய 112 பேரில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

மேலும் தாருஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து ஐந்தாண்டு 100% வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 2023-24 ம் ஆண்டில்தான் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு எழுதும் சென்டர் அறிவிக்கப்பட்டது. ஆகையால் முதல் ஆண்டிலேயே 100% வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளை ஜமாத் சார்பாகவும், நிர்வாக குழு சார்பாகவும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அனபா ஆஸ்மி மொஹீ-574, இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவி அ.ஆயிஷா சித்திகா-562, மதிப்பெண்கள் மூன்றாவது அ.நஸீஹா சப்ரீன்மூ-560 மதிப்பெண்கள் பெற்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அளவில் முதலிடம் பெற்ற தாருஸ்ஸலாம் பள்ளி ஆசிரிய பெருமக்களை பொதுமக்கள் பாராட்டிய வருகின்றனர்.