புளியங்குடியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் 134-வது பிறந்தநாளை விழா

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் அலங்கரித்து வைக்கப்பட்ட சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.சதன் திருமலைகுமார், புளியங்குடி திமுக நகர செயலாளர் ஆ.அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திர சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையின் அணி அமைப்பாளர் நாகூர் கனி, மதிமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன், அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன், மீனாட்சிசுந்தரம், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வர்த்தக அணி செயலாளர் மைதீன், நகரப் பொருளாளர் காஜாமைதீன், நகர சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் சேக் மைதீன், நகர இளைஞரணி செயலாளர் சதீஷ், முருகேஷ், நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகா மகேஷ், வார்டு செயலாளர் வேலாயுதம், கருத்த பாண்டி, குட்லக் நடராஜன், முனியராஸ், முருகன், ரஜினிமுருகன், குருராஜ், முத்து செல்வம், ராஜ் மீனா மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் பீர் ஒலி, கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.