தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணல் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் நிகழ்ச்சி

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் நிகழ்ச்சி  சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் மாநில விவசாய அணி துணை அமைப்பாளரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும்மான நல்ல சேதுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ,புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மதிமுக மாவட்ட செயலாளர் சுதாபாலசுப்ரமணியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, வேல்சாமிபாண்டியன், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, போக்குவரத்து தொமுச சங்கர் ராஜ், மின்வாரிய தொமுச திட்ட தலைவர் தங்கமாரிமுத்து, தொண்டரணி அப்பாஸ் அலி, விவசாய தொழிலாளர் அணி முருகராஜ், நகர பொருளாளர் லாசர், இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாணவர் அணி வீரமணி, வார்டு செயலாளர்கள் பாட்டத்தூர் ராமலிங்கம், வைரவேல், காளிசாமிபாண்டியன், முத்துக்குமார், வீராசாமி , தங்கவேல், வக்கீல்கள் ஜெயக்குமார், காந்திநகர் ஜெயக்குமார், மற்றும் வெங்கடேஷ், அஜய்மகேஷ்குமார், ஜெயக்குமார், பீர், சதீஷ், காவல்கிளி, தினேஷ், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.