புதுக்கோட்டை  ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில்  தமிழ் புத்தாண்டின் சிறப்பு வழிபாடு, தன்வந்திரி மகாவிஷ்ணு  பூஜை

புதுக்கோட்டை, தெற்கு  4 ஆம் வீதி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கற்பக மகா கணபதியின் தேவ அணுக்கிரகத்தோடு ஆரம்பித்து, சித்திரை தமிழ் புத்தாண்டு  குரோதி ஆண்டின் பஞ்சாங்கம்  பலன்   படிக்கும் வைபவம் ஆலய சிவாச்சாரியர் கே.மணிகுருக்கள் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மகாவிஷ்ணுவின் சிறப்பு அவதாரமாக விளங்கக்கூடிய தன்வந்திரி சம்ப்ரோக்ஷன பூர்வாங்க பூஜை, வாஸ்து பூஜையும், உலகின் முதல் மருத்துவம் என்று கருதக்கூடிய தன்வந்திரி மகாவிஷ்ணுவின்  பூஜை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கும், ஹயக்ரீவருக்கும், வராஹி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு  சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா  தீபாரதனையும் நடைபெற்றது. தன்வந்திரி மகாவிஷ்ணுவின் பூஜையில் மருத்துவர்கள் டாக்டர் ராமதாஸ், டாக்டர் சிவகுமார், டாக்டர் ஹேமா, டாக்டர் நாச்சியப்பன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், வழக்கறிஞர் முருகேசன், பொதுப்பணித்துறை செந்தில், சீனிவாச குருக்கள்,  ஆன்மீக நெறியாளர் ஆனந்த், கவிதா பாத்திரக்கடை முருகேசன் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்ட அனுமன் திருச்சபை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தன்வந்திரி பூஜையில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.