சிந்தாமணி டோல்கேட்டில் அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை விழா

தென்காசி மாவட்டம், சிந்தாமணி டோல்கேட் முன்பாக அண்ணல் அம்பேத்கரின் 134- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் சங்கர பாண்டியன் தலைமையில், முன்னாள் நகர செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில், பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், ரவிக்குமார், நடராஜன், பேச்சு முத்து, மண்டல செயலாளர் ஆத்மநாபன், கணேஷ் குமார், வி.எஸ். மாரியப்பன், சௌகத் அலி, சபரி, குமார், செல்வகுமார், முத்துக்குமார், பாலு, சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கரின் அலங்கரித்து வைக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை கொண்டாடினர்.