ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பொன்னமராவதி வர்த்தகர் கழக மஹாலில் நடந்தது.

 ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாக இயக்குநர் ஜெயபால் தலைமை வகித்தார். ஆதிகாலத்து அலங்கார மாளிகை இணை நிர்வாக இயக்குனர் அருண்  வரவேற்றார். பொன்னமராவதி வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன், ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாக இயக்குநர் மணிகண்டன், இணை நிர்வாக இயக்குனர்கள் பரமசிவகுமார், பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

விழாவில் சென்னை ஐடியா பிளஸ் மனிதவள நிறுவனத்தின் சேர்மன்  கிருஷ்ண வரதராஜன் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட மூன்று நபர்களுக்கு ஹோண்டா டியோ வாகனங்களையும் ஒரு நபருக்கு கிரைண்டர், ஒரு நபருக்கு மிக்ஸி, மற்றும் 120 நபர்களுக்கு  5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை சாமான்களையும் ஆதிகாலத்து அலங்காரமாளிகையின் சார்பில் பரிசாக வழங்கினர். விழாவில் ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் மகேஸ்வரன், ராஜா,  சிவலிங்கம்,  விஜய் மற்றும் நிர்வாகிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் நிர்வாக மேலாளர் வீரையா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சண்முகம்,   விஜயபாஸ்கர், மனிதவள மேலாளர் ராஜி ஆகியோர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.