புதுக்கோட்டையில் ஸ்ரீ குரோதி  வருஷ  பஞ்சாங்கம்  வெளியீட்டு விழா 

புதுக்கோட்டை மாவட்ட பிராமணர் சங்கம் சார்பாக ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்கம் வெளியிட்டு விழா  மாவட்ட பிராமணர் சங்கத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் ஆடிட்டர் தியாகராஜன் விழாவிற்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரசாத் வரவேற்புரை ஆற்றினார்.  ஸ்ரீ குரோதி வர்ஷா பஞ்சாங்கத்தை தொழிலதிபர் கிண்டேன்  ஸ்ரீதர் வெளியிட திருவேங்கைவாசல் ஜெயராமன் பெற்றுக் கொண்டார். விழாவில்  அனைவரும் அன்பு சகோதரத்துவத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது.  நிகழ்வில்  குரு ஸ்ரீராம், ஸ்ரீதரன், சிவக்குமார் நடராஜன், ஸ்ரீனிவாசன்,  சங்கர சாஸ்திரிகள் சௌந்தரபாண்டியன்,  சுப்பிரமணியன்,  ஆனந்த் சாஸ்திரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்  பொருளாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.