கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கறம்பக்குடி அருகே மழையூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மழையூர் ஊராட்சி கடைவீதி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையை எடுக்கப்படவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்களும், பொதுமக்களும் காலி குடங்களுடன் புதுக்கோட்டை, கறம்பக்குடி சாலையில்  சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மழையூர் காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு மற்றும் மழையூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி தர்மராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீா் பிரச்சனை சரி செய்யப்பட்டு உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என கூறியதையடுத்து  சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட்டத்தினால் புதுக்கோட்டை, கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.