சேலம் மாநாட்டு தீர்மான விளக்க உரை பொதுக்கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம், விஸ்வநாதப்பேரி, இராமநாதபுரம், திருமலாபுரம் ஆகிய மூன்று கிளைகளில் சேலம் மாநில இளைஞரணி மாநாட்டு தீர்மான விளக்க உரை பொதுக்கூட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையாபாண்டியன் தலைமையில், கிளை செயலாளர் மற்றும் கிளை நிவாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக  கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் மனோகரன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் எஸ்.எஸ்.செண்பகவிநாயகம், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன், இராயகிரி பேரூர் கழகச் செயலாளர் கே.டி.சி.குருசாமி, சிவகிரி பேரூர் கழகச் செயலாளர் சேது சுப்பிரமணியன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் சந்திரமோகன், தலைமை கழக பேச்சாளர்கள் இஸ்மாயில், ச.முத்துசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்ரம் மணிகண்டன், மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், மாவட்ட பிரதிநிதி மைதீன்கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் முனியராஜ், விமலா மகேந்திரன், செல்வி ஏசுதாஸ், சரஸ்வதி சமுத்திர பாண்டியன், விஸ்வநாதப்பேரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், திருமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாப்பிள்ளைத்துரை, கிளைக் கழக செயலாளர்கள் & நிர்வாகிகள் ராமமூர்த்தி, குருநாதன், மகேந்திரன், தங்கம், சமுத்திரக்கனி, விஜயகுமார், இசக்கிமுத்து, பராசக்தி, காளீஸ்வரி, சதீஷ்குமார், ஆண்டாள், ரவிச்சந்திரன், குமார், சித்ராதேவி, முருகன், செல்லத்துரை, மா.சலீமா, திருமலைச்சாமி, மணிகண்டன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ராமராஜ், சமுத்திர பாண்டியன், பால்ராஜ், கணேசன், சுசீலா தேவி சரவணன், கடற்கரை, மாப்பிள்ளைத்துரை, சண்முகத்தாய், பெருமாள், ராஜதுரை, பாக்கியவதி, வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் விக்கி, மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.