சங்கரன்கோவில் இந்து பாண்டிய வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

சங்கரன்கோவில் இலவன்குளம் சாலை நேதாஜி நகர் பகுதியில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் இந்து பாண்டிய வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சமுதாய நலக்கூடம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு சமுதாய தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, திமுக நகர செயலாளர் பிரகாஷ், சமுதாய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய சமுதாய நலக்கூடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் வெங்கடேஷ், கவுன்சிலர் செல்வராஜ், வார்டு மெம்பர் பாலசுப்பிரமணியம், சமுதாய பொருளாளர் மாடசாமி, துணைச் செயலாளர்கள் சண்முகையா, மாரியப்பன், துணை பொருளாளர் குருவராஜ், தண்டல் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வேல்சாமி, முருகன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.