கொழும்புவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை

கொழும்புவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவர் அபார சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் ஸ்ரீலங்காநேசனல் யோகா அசோசியேசன் ஆசியன் யோகா பெடரேஷன், கொழும்பு சிவ விஷ்ணு யோகா பீடம் இணைந்து நடத்திய சர்வதேச யோகா போட்டி – 2024-ல் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான்.ஹாங்காங், அமெரிக்கா போன்ற பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்கேற்றனர். இதில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம்  புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆத்மா யோகா மாணவர் மன்றத்தின் மாணவர்கள் பரிசு பெற்று சாதனை புரிந்தனர்.

இதில் ஒட்டு மொத்தமாக ஆண்களுக்கான பிரிவில் பா.சஞ்சீத் பாபு சர்வதேச யோகாசன சாம்பியன் – 2024 பட்டம் வெற்று சாதனை புரிந்தார். 8-வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பா.சுர்ஜீத் பாபு முதலிடமும் பிடித்து நமது பள்ளிக்கும்.இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் இவர்களுக்கு ஸ்ரீலங்கா கல்வி இலாக்கா அமைச்சர் அரவிந்தகுமார் சேம்பியன் கேப்பை மற்றும் சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்திய தூதரகச் செயலாளர் நவ்யா சிங்லா வெற்றி பெற்றவர்களைப் பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாட்டினை சிவ விஷ்னு யோகா பீடத்தின்  நிறுவனர் யோகாச்சார்யா ராஜ்குமார். ஆசியன் யோகா பெடரேஷன் பொருப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.