பண்பொழி திருமலை கோவிலில் சமபந்தி அன்னதான திருவிழா சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலை கோவிலில் பேரறிஞர் அண்ணா வழிகாட்டிய வழியில் தமிழ்நாட்டில் உரிமைகளை வென்றெடுக்க அண்ணாவின் 55- வது நினைவு நாளையொட்டி திருமலை கோவிலில் சமபந்தி அன்னதான நிகழ்ச்சி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.காமல் கிஷோர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மா.செல்லத்துரை தலைமையில் சிறப்பு அன்னதான பூஜை நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரா.முருகன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், பண்பொழிபேரூர் செயலாளர், சேர்மன் ராஜராஜன், வடகரை பேரூர் செயலாளர் ஷேக் தாவுது, கரிசல் வேலுச்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ், பொன் செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரஹீம், ஐவேந்திரன் தினேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகைதீன் கனி, திரிகூபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் செய்யது மீரான், நகரத் துணைச் செயலாளர் காசி, வார்டு செயலாளர் அப்துல் ரசாக், கே.டி.சி. முருகையா, ஜாகிர் உசேன், நல்லையா, மதியரசன், சாமி, ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.