தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில்  அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக நிறுவனரும்  முன்னாள் முதல்வருமான அறிஞர் அண்ணாவின் 55- வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி நடைபெற்றது. 

மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

முன்னதாக வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பேரணி ரயில்வே பீடர் சாலை மெயின் ரோடு வழியாக சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே வந்தடைந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, வெற்றி விஜயன், பூசைபாண்டியன், பொன்முத்தையாபாண்டியன், கிறிஸ்டோபர், சேர்மத்துரை, ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, தேவதாஸ், கவுன்சிலர் மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, வேல்சாமி பாண்டியன், மாரிச்சாமி நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் குருசாமி, மாரிமுத்து, ரூபி பாலசுப்ரமணியன் நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, பேரூராட்சி தலைவர்கள் கோமதி சங்கரி, இந்திரா, லாவண்யா, சார்பு பணி அமைப்பாளர்கள், வழக்கறிஞர் அணி வக்கீல் பிச்சையா, இளைஞர் அணி முகேஷ், மருத்துவர் அணி டாக்டர் மணிகண்டன், பொறியாளர் அணி பசுபதி பாண்டியன், மாணவரணி உதயகுமார், தொண்டரணி அப்பாஸ், மகளிர் அணி சிவசங்கரி, தகவல் தொழில் நுட்ப அணி கிப்ட்சன், சிறுபான்மையினர் அணி நாகூர் ஹனி, சார்பு அணி நிர்வாகிகள் ஆயில் ராஜா பாண்டியன், கார்த்தி, ராஜ், முருகராஜ், சரவணன், சேதுசுப்பிரமணியன், கருப்பசாமி, நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர பொருளாளர் லாசர், தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், சரவணமுருகையா, சத்யராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வக்கீல் சண்முகையா, முப்பிடாதி, தொமுச கூட்டுறவு நியாய விலை கடை சங்க நிர்வாகிகள் முருகன், சரவணன், பிச்சையா, ஜெயராம், வார்டு செயலாளர்கள் பாட்டத்தூர் ராமலிங்கம் ,தங்கவேலு, முத்துக்குமார், வீரா, வீரமணி ஆறுமுகம் பழனிச்சாமி மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, கவுன்சிலர்கள் ராமு, அலமேலு, விஜயகுமார், செல்வராஜ் வக்கீல்கள் கண்ணன் ஜெயக்குமார் மற்றும் அண்ணாமலை, ஜெயக்குமார் செந்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.