கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா இருசக்கர மிதிவண்டி வழங்கும் விழா

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ச.ராஜகோபால் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுவின் தலைவி அமராவதி முன்னிலை வகித்தார், பள்ளி மேலாண்மைகுழு புரவல உறுப்பினர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.எஸ்.ரமேஷ், உறுப்பினர் சுந்தர், முதுகலைத்தமிழாசிரியர் சண்முகசுந்தரம், முதுகலை ஆங்கில ஆசிரியர் திருமலைச்செல்வி, முதுகலை இயற்பியல் ஆசிரியர் ராஜேஷ்குமார், வேளாண் ஆசிரியர் கண்ணன், முதுகலை பொருளியல் ஆசிரியர் சாம்சிகாபுதீன், உடற்கல்வி ஆசிரியர் குமாரசேகர், ஓவிய ஆசிரியர் முகைதீன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.