லாரி மோதி மாணவன் பலி. ரிசல்ட் வெளியான சில மணி நேரத்தில் நடந்த துயரம்

சென்னையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா(16). இவர் மதுரவாயலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று காலை ஜீவா இருசக்கர வாகனத்தில் சென்னை மதுரவாயில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே வரும் போது பின்னால் வேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜீவா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்ததுடன் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான சிலமணி நேரங்களில் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது