பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்  புதுக்கோட்டை வைரம்ஸ் பள்ளி அபாரம்

2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வில் புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நித்யஸ்ரீ சுரா  500க்கு 495 மதிப்பெண்களும், விக்னேஷ் மோ  500க்கு 494  மதிப்பெண்களும், ஸ்ரீஜா பி  500க்கு 492 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்கள். மேலும் பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை 29 மாணவர்கள் பெற்றுள்ளனர்.  தேர்வு எழுதிய 185 மாணவர்களின் 123 மாணவர்கள் 400க்கு மேல்  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி நிர்வாக ஒருங்கிணைப்பாளர்  அஸ்வினி நாச்சம்மை,  முதல்வர்  சிராஜுதீன், துணை முதல்வர் சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல்லா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.