புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மேலும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தையும் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தனபால், தவவர்மா, அபிநயா ஆகிய மாணவ, மாணவியர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
![](https://varalaruu.com/wp-content/uploads/2024/05/cf431b87-aaf6-4a33-805c-7c0d30ae601c-1024x682.jpg)
மேலும் இப்பள்ளியில் பயின்ற 24 மாணவ மாணவிகள் 550 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் கண்ணையன், பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.