பச்சை பூமி அமைப்பின் சார்பில் உலக புத்தக தினம்

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய மாடியில் உள்ள அன்னை கல்லூரியில், பச்சை பூமி அமைப்பின் சார்பில் 26 ஆவது ஆண்டாக இலவசமாக நடைபெற்று வரும் ஆண்டனிஸ் ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமியில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

அன்னை கல்லூரி நிறுவனர் சேவியர் தலைமை தாங்கினார். கடியாபட்டி, உலகப்பர் மேல்நிலைப்பள்ளி ஆங்கில முதுகலை ஆசிரியர் சேதுராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தின் அவசியம் குறித்தும் நல்ல நூல்களின் பெயர்களை மாணவர்களிடம் தெரிவித்தும் முக்கிய தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை உதாரணமாக காட்டியும், மாணவர்கள் அவசியம் புத்தகங்களை வாசித்து தங்கள் அறிவுத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பச்சை பூமி புரவலர் ஆண்டனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக புத்தகங்களை வழங்கினார். தன்னார்வலர்கள் விக்னேஷ், சந்துரு, முருகன், சந்தோஷ் குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்படுகளைச் செய்திருந்தனர்.