தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து பிரச்சாரம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட குமந்தபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் தலைமையில், கடையநல்லூர் திமுக நகர செயலாளர் எஸ்.அப்பாஸ் முன்னிலையில், வார்டு செயலாளர் காளிமுத்து, முன்னாள் மாவட்ட செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், மா.செல்லத்துரை, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், ஐவேந்திரன் தினேஷ், சி.பாலசுப்பிரமணியம் மாவட்ட பிரதிநிதி, வி.குருசாமி, கே.கிருஷ்ணசாமி, வி.சுப்புராஜ், பி.ஈஸ்வரன், கே.சோமு, கே.ரஞ்சித் மற்றும் பொதுமக்கள், வார்டு செயலாளர்கள், மாவட்ட கழக சார்பணி நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.