திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் : பிரதமர் மோடி பேச்சு

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கம், அவர்களது வாரிசுகள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது மட்டும் தான் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டுடார். இதற்காக கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும் போது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசும் போது, ”திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். பொய் சொல்லி ஆட்சியில் இருப்பது தான் திமுக, காங்கிரஸ் போன்ற குடும்ப கட்சிகளின் ஒரே நோக்கம். திமுக, காங்கிரஸ் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. வறுமையில் இருந்த மக்களுக்கு, பாஜக அரசு வீடு, மின்சாரம், ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளது.” என்றார்.

மேலும், “தமிழகத்தில் மனித ஆற்றலும் திறமையும் கொட்டி கிடக்கிறது. ஆனால் அதை திமுக அரசு வீணடித்து வருகிறது. ஜவுளி தொழில் சிறந்து விளங்கும் கோவை, மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை அதிகாரத்துக்கு வருவதை இந்தியா கூட்டணி கட்சிகள் விரும்புவதில்லை. ஆனால் பாஜக பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தது. ஆனால் அதையும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அவர்களின் நோக்கம் அவர்களது வாரிசுகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டும்தான்” என்றார்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-9693451887247156&output=html&h=280&adk=311073930&adf=98421822&pi=t.aa~a.4200144536~i.5~rp.4&w=752&fwrn=4&fwrnh=100&lmt=1712742888&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=1941324037&ad_type=text_image&format=752×280&url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fpolitics%2Fpm-modi-criticizes-india-alliance-in-coimbatore-campaign-meeting&fwr=0&pra=3&rh=188&rw=752&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTIzLjAuNjMxMi4xMDYiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyMy4wLjYzMTIuMTA2Il0sWyJOb3Q6QS1CcmFuZCIsIjguMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTIzLjAuNjMxMi4xMDYiXV0sMF0.&dt=1712742880184&bpp=2&bdt=965&idt=2&shv=r20240408&mjsv=m202404030101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Da842eccc92d07727-22dcb04edce2008d%3AT%3D1690698009%3ART%3D1712742816%3AS%3DALNI_Mb1PAG1Xkk6tqjurdk5D5tFeMbm5Q&gpic=UID%3D00000c2555463488%3AT%3D1690698009%3ART%3D1712742816%3AS%3DALNI_Mawrh0Ob9WXJvSFgSMvQLTJuPo2AA&eo_id_str=ID%3D79ad44e5e6fa91da%3AT%3D1706611638%3ART%3D1712742816%3AS%3DAA-Afjaf8ALagGCJwShlf3QEE-b3&prev_fmts=0x0%2C752x280&nras=3&correlator=4550582608567&frm=20&pv=1&ga_vid=1633204430.1690697998&ga_sid=1712742880&ga_hid=414498813&ga_fc=1&u_tz=330&u_his=26&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=105&ady=3725&biw=1349&bih=607&scr_x=0&scr_y=1314&eid=44759876%2C44759927%2C44759837%2C31082547%2C31082548%2C95329439%2C95321963%2C95321868%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=4354656720188395&tmod=541338366&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fstate&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C607&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=10&uci=a!a&btvi=2&fsb=1&dtd=8355 தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து அண்டை நாடுகளுக்கும் வழங்கினோம். இப்போது இந்தியா கூட்டணிக்கு எதிரான தடுப்பூசியாகவும் இருக்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தை திமுக முடக்க நினைக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மாநிலங்கள் வளர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். கொரோனா காலத்தில் பாதிகப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பேக்கேஜை வழங்கியிருக்கிறோம். கோவை உட்பட 2 நகரங்களில் பாதுகாப்பு தளவாட பட்டறை துவங்க திட்டமிட்டுள்ளோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.