நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அற அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கியது. இதையடுத்து, கடந்த 7 நாட்களாக அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். குறிப்பாக, நேற்று முன்தினம் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்றும் ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 800- க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.