புதுக்கோட்டையில் 73 ஏழைப்பெண்களுக்கு  ரூ.29.75 இலட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 73 ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கத்தினை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பெண்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

அதன்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித்திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணம் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்பட்டது.