புதுக்கோட்டையில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம்  நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமானது புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று  நடைபெற்றது.  நிகழ்வில்  ரோட்டரி மாவட்ட  ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, சிறப்பு விருந்தினராகவும், டிஸ்டிக் செயலாளர் டாக்டர் சலீம்,  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக  மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, துணை ஆளுநர்கள் லட்சுமணன், பாபு ஜான்,  செல்வமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் பசுபதி, புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் கருப்பையா என்ற கண்ணன், பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர்  சுகதேவன்,  ஆலங்குடி ரோட்டரி சங்கத் தலைவர் சங்கர், புதுக்கோட்டை கிரவுன் சிட்டி  ரோட்டரி சங்கத் தலைவர்  சிவசக்திவேல்,  புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் யோகநாதன், கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் தலைவர்  பீமராஜ்,  புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் மாரிக்கண்ணு வைரவன்,  திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத் தலைவர் கபூர், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் தலைவர் தங்கராஜ்  மற்றும் அச்சங்கங்களின் நிர்வாகிகள் குருதிகூடு அமைப்பு மற்றும் ரோட்டராக்ட் சங்கத்தினர்  ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்  அனைவருக்கும்  சுகாதாரத் துறை சார்பில் சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.