ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி சங்கங்கள் நடத்திய உலக அமைதி விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உலக அமைதி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அறந்தாங்கி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி, மீமிசல் கிங்ஸ் ரோட்டரி, அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி, அறந்தாங்கி ஃபிரண்ட்ஸ் ரோட்டரி ஆகிய சங்கங்கள் இணைந்து உலக அமைதிக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அறந்தாங்கி தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி தலைமையில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ரெட்கிராஸ் அறந்தாங்கி செயலாளர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயந்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கான ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி மாணவ, மாணவிகள் உலக அமைதிக்கான முழக்கமிட்டு, பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வெஸ்ட்லி பள்ளியில் முடிந்தது. அங்கே மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டன.

மீமிசல் ரோட்டரி பட்டய தலைவர் வீரத்துரை, அமரடக்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் யோகேந்திரன், மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் ரஜினிகாந்த், பொருளாளர் கார்த்திக், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி, செயலாளர் ஆட்டோ பிரவீன், பொருளாளர் முனைவர் முபாரக் அலி, அறந்தாங்கி ஃபிரண்ட்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கட் குமார், செயலாளர் சாத்தையா, பொருளாளர் செல்வம் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து செயல்பட்டார்கள்.

மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, வெஸ்ட்லி பள்ளி தாளாளர் ஹரிஹரன், அறந்தாங்கி இணை ஒருங்கிணைப்பாளர் நாகூர்கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஷோபா, பாஸ்கரன், கவிதா, பாஸ்கர், பழனிமுத்து, சாத்தப்பன் உள்ளிட்ட அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் மணிமேல்குடி வட்டார ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் முத்துதுரை அனைவருக்கும் நன்றி கூறினார்.