தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்

oppo_2

தென்காசி மாவட்டம், தென்காசி அருகே இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட தலைவர் சீனிவாசன் வரவேற்பு உரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து இயக்க செயல்பாடுகள் பற்றியும், மாநில பொருளாளர் இளங்கோ நிதியும், பொது நிகழ்வு பற்றியும், மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன்   நன்றி உரையும் நிகழ்த்தினார்கள்.

இந்த கூட்டத்தில் பொறியாளர்கள் அருள் சுந்தரராஜன், நடராஜன், முனைவர் சாமி சத்தியமூர்த்தி, நடராஜன், மோகனசுந்தரம், முனியன், முனைவர் பீட்டர் ராஜா, ராஜு, மாநில தலைமை நிலைய செயலாளர், மாநில துணை தலைவர், மாநில மகளிர் அமைப்பாளர்கள், மாநில சட்டவல்லுனர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

01.01.2016 க்கு பிறகு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களிலிருந்து பணி மாறுதல் மூலம் பணிபுரியும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்ந்த உச்ச நீதிமன்ற வழக்கை தமிழக அரசு விரைவு படுத்தி 01.01.2016 க்கு பிறகு பணிபுரியும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிலையிலும்,  எதிர்கால பதவி உயர்விலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

2018 ஆம் ஆண்டு வரை 5:2 என்ற நடைமுறையில் இருந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக 7:2 என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 5:2 என்ற விதாசாரத்திலேயே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். காலியாக உள்ள ஏபிஓ மற்றும் பிஏ, டிஓ, சிஇஓ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளீட்டு தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.