பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் ஆயிஷா பேகம் தலைமை ஏற்று தூங்கி வைத்தார்கள். வயிற்றுநர்கள் க.சிவகுமார், பாலசுந்தரம் ஆகியோர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் ஆரோக்கிய சகாயராஜ் செய்தார். கலந்து கொண்ட அனைத்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் கையேடு, குறிப்பேடு, உபகரணங்கள் வழங்கப்பட்டது. இரண்டு நாளும் கலந்து கொண்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.