சி.பி.எஸ்.இ,தனியார் பள்ளிகளின் நிர்வாக சங்க தலைவராக ஜோனத்தன் ஜெயபரதன் தேர்வு

மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர்.டாக்டர். ஜோனத்தன் ஜெயபரதன் (சி.பி.எஸ்.இ,தனியார் பள்ளிகளின் நிர்வாக சங்கம்) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கொடைக்கானலில்சி.பி.எஸ்.இ தனியார் பள்ளிகளின் நிர்வாகக் கூட்டமைப்பிற்காக ஜூன் 22, 2024 அன்று நடந்த வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தல் தேர்வுக்குழு உறுப்பினர்களால் ஜூன் 2024 முதல் ஜூன் 2027 ஆண்டிற்கான திருச்சி மண்டலம்-4 தலைவருக்காக நடத்தப்பட்ட தேர்தலில், புதுக்கோட்டை, மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர்டாக்டர். ஜோனத்தன் ஜெயபரதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நான்காம் மண்டலக்குழுவில் இடம் பெற்றுள்ள மாவட்டங்கள் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் உள்ளடங்கும்.