கைக்குறிச்சி ஏடிஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை அருகில் உள்ள கைக்குறிச்சி ஏடிஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா நேற்று பள்ளியின் தாளாளர் அ.தர்மராஜ்பிரபு மற்றும் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி த.சரவணகுமார் ஆலோசனைப்படி சிறப்பாக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் 200 க்கு மேற்பட்ட பள்ளியின் மாணவ, மாணவியர்கள், ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்றார்கள். பள்ளியின் துணை முதல்வர் ச.தீபிகா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் உடற்கல்வி ‌‍ ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு, பத்மாசனம் , யோகமுத்ரா , சவாசனம் , வீராசனம், உட்கடாசனம் போன்ற யோக ஆசனங்கள் பயிற்சிகள் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைவரும் யோகாசனங்களை செய்தார்கள்.