நெல்லையில் சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்துபுதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு ஆதரவளித்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு ஆலுவலத்தை தாக்கிய சாதி வெறியர்களைக் கண்டித்து புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், சு.மதியழகன், துரை.நாராயணன் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.