புதுக்கோட்டையில்  ஒளிரும் வளர்மதி மாத இதழ் நடத்திய கே.சாதாசிவம் எழுதிய மகிழ்வுடன் கற்றல் நூல் வெளியீட்டுவிழா

புதுக்கோட்டையில்  ஒளிரும் வளர்மதி மாத இதழ் நடத்திய கே.சாதாசிவம் எழுதிய மகிழ்வுடன் கற்றல் நூல் வெளியீட்டு விழா, புதுக்கோட்டை வருவாய்த்துறை கூட்ட அரங்கில் சிறப்பாக  நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புதுக்கோட்டைத் தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், அறிவியலை எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செயல்விளக்க படம் மூலம் நிரூபிக்கிறார் ஆசிரியர் கே.சதாசிவம், இந்நூல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியலை எளிமையாக கற்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே அனைவரும் வாங்கி படித்து அறிவியலை எளிமையாக புரிந்து கொண்டு அறிவியல் மனப்பான்மை மிக்கவர்களாக திகழ வேண்டும் என்றும் பேசினார். இந்நூலினை மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி வெளியிட எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார்  பெற்றுக்கொண்டார். முனைவர் உஷா நந்தினி நூலினை அறிமுகம் செய்து பேசினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.வசந்தகுமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் விமலா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நூலின் ஆசிரியர் கே.சதாசிவம் ஏற்புரை வழங்கினார். முன்னதாக வளர்மதி மாத இதழ் ஆசிரியர் ப.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் வீரமுத்து நன்றி கூறினார்.