தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அபார வெற்றி வாக்குறுதியை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று பேட்டி

தென்காசி மாவட்டம்-தென்காசி பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளடங்கிய ஆறு தொகுதிகளில் 24 ரவுண்ட்களில் பெற்ற வாக்குகள் எண்ணிக்கையில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் 4,22,425- வாக்குகள் பெற்று தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு என்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 2,27,892- வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் பிஜேபி வேட்பாளர் ஜான்பாண்டியன் 2,06,522 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 1,28,573 வாக்குகளும் நோட்டாவிற்கு 16, 834 வாக்குகளும் மொத்தம் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு 10,29,584 வாக்குகள் பதிவாகியிருந்தன.

திமுக வெற்றி பெற்ற நிலையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறியதால் வெற்றிபெற முடிந்தது. திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் நகர, ஒன்றிய, கூட்டணி கட்சிகளுக்கும், பணியாற்றிய தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அயராது பாடுபடுவேன் என்று கூறினார்.