புதுக்கோட்டையில் 49ம் ஆண்டு கம்பன் பெருவிழா நடைபெறும் தேதி அறிவிப்பு

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் விழாக் குழுக் கூட்டம் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் கம்பன் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

49ம் ஆண்டு கம்பன் பெருவிழாவை ஜூலை 12- ந்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 21- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. விழா தேதியினை தலைவர் அறிவித்தார். விழாமங்கலம், விருதளிப்பு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிதைச்சோலை, சுழலும் சொல்லரங்கம், நற்றமிழ் முற்றம், கவியரங்கம், ஏழில் உரை, பரிசளிப்பு, கம்ப நாட்டியம், பாட்டுமன்றம், சந்திப்பு வளையம், கனல் உரை, கம்பனிசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கம்பன் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். செயலாளர் ரா.சம்பத்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.