பாரதிய ஜனதா கட்சி சார்பில் மழையூரில் மாபெரும் கிரிக்கெட் போட்டி

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மற்றும் புதுகை நேதாஜி பாய்ஸ் குரூப்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி கறம்பக்குடி ஒன்றியம் மழையூரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பரிமலேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்ஜி ஆனந்த் கலந்துகொண்டு முதலிடம் பெற்ற ஊரணிபுரம் கிரிக்கெட் அம்மன் கிரிக்கெட் அணிக்கு முதல் பரிசுத் தொகை ரூபாய் 30,000 ரொக்கம் வழங்கினார். தொடர்ந்து டாக்டர் ஆர்ஜி ஆனந்த் பேசுகையில் முதல் முறை வாக்காளர்களுக்கு மோடி அரசு கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் முக்கியம் அளித்து வருகிறது.

அதனால்தான் இந்தியா முழுவதும் கிரிக்கெட்,ஹாக்கி, நீச்சல்,கபடி போன்ற போட்டிகளை நடத்தி இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார். நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏவிசிசி கணேசன், குரு ஸ்ரீராம்,தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சுப்ரமணியன்,சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் கிரீன்குட்டி நகர தலைவர் லட்சுமணன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் வீரையா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை தலைவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நேதாஜி குரூப்ஸ் அமைப்பாளர் அஜய் நன்றி கூறினார்.