புதுக்கோட்டை தெற்கு மாவட்ட ஆலங்குடி தொகுதி பார்வையாளர் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சோத்தல் / நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொகுதி பார்வையாளர்களை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி தொகுதிக்கான தொகுதி பார்வையாளர் அறிமுக கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் 23.10.2024-ஆம் தேதி புதன்கிழமை மாலை 05.00 மணியளவில் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு தொகுதி பார்வையாளராக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில துணைச் செயலாளர் எழில் மாறன் செல்வேந்திரன் கலந்துகொள்கிறார்.

மேற்படி ஆலங்குடி தொகுதி பார்வையாளர் அறிமுக கூட்டத்தில் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், துணைப் பெருந்தலைவர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.