பாஜகவை கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பாஜகவை கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ( வடக்கு) சார்பில் இன்று மாலை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் ராகுல்காந்தியின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை விமர்சித்து அவதூறு பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா நிர்வாகி எச்.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை. திவியநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் மதன் கண்ணன், புதுக்கோட்டை வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன், மாவட்ட துணை தலைவர் வேங்கை அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வையும் எச்.ராஜாவையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் கறம்பக்குடி தங்கசிவா, விராலிமலை சட்டையப்பன், ராஜசேகர், குமாரசாமி, அன்னவாசல் முகமது கனி, ராஜா முகமது, சிவக்குமார், காதர், தினேஷ், ஓம் செல்வராஜ், ஓம் ராஜ் மக்கள் கோபால், அப்துல் அமீது, சகாய ராஜ்,  மகளிர் அணி நிர்வாகிகள் லதா, கவிதா, உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.