புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக  பொது உறுப்பினர்கள் கூட்டம் குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக  பொது உறுப்பினர்கள் கூட்டம் குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று பிரமாண்டமாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில்  பொது உறுப்பினர்கள் கூட்டம்  (புதுக்கோட்டை-திருச்சி சாலை) குளத்தூர் ராயல் பாலிடெக்னிக் கல்லூரியில்  மாவட்ட அவை தலைவர் அரு.வீரமணி தலைமையில்  நடைபெற்றது மாவட்ட செயலாளர்  கே.கே.செல்லபாண்டியன் வரவேற்புரையாற்றினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா, முன்னாள் அமைச்சர் கடலாடி சத்தியமூர்த்தி,  தஞ்சாவூர்  துணை மேயர் அஞ்சுகம் பூபதி,  புதுக்கோட்டை தொகுதி பார்வையாளர்  கார்த்திகேயன் வேலுச்சாமி, கந்தர்வகோட்டை தொகுதி பார்வையாளர்  குறிஞ்சிவாணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். 

நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள்;  எம்பி அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா,  முன்னாள் எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, கவிதை பித்தன்,  அஞ்சுகா மீனாட்சி சுந்தரம், அரசகுமார், சந்திரசேகரன், விஜயா,  வி.என்.மணி, சுப.சரவணன்,  டாக்டர் அண்ணாமலை, கேஆர்என்.போஸ், அசோக் பாண்டியன், மேயர் திலகவதி செந்தில், ஆ.செந்தில், கருப்பையா, மதியழகன், ராஜேஸ்வரி,  கீரை தமிழ்ராஜா, சண்முகம், ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன், தவ.பாஞ்சாலன்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், கவிதை பித்தன்  உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள்  வரும் சட்டசபை தேர்தலில்  எந்த அளவிற்கு  நாம் சிரத்தை எடுத்துக் கொண்டு  பணியாற்ற வேண்டும்  என்றும்  சாதாரண தேர்தல் அல்ல  திமுக  நான்காம் தலைமுறைக்கான மையதேர்தல்  என்றும் தொண்டர்களை  உற்சாகமூட்டும் விதமாகவும் தேர்தலுக்கு தயார்படுத்தும் விதமாக பேசினர். கூட்டத்தின் முடிவில்  தொடர்களுக்கு  கல்யாண விருந்த விட பிரம்மாண்டமாக  பிரியாணி விருந்து  அளிக்கப்பட்டது மாநாடு போல் கூட்டம் அமைந்திருந்தாக கூட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர். மாவட்ட பொருளாளர்  லியாகத்அலி  நன்றி கூறினார்.