புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கிரவுன் சிட்டி ரோட்டரி சார்பில் நட்ஸ் வழங்கல்

புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாலை நேர சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு சிற்றுண்டிக்கான நட்ஸ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் தலைவரும் புதுகை வரலாறு நாளிதழ் நிறுவனரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சு.சிவசக்திவேல் 40 கிலோ கொண்டை கடலை வழங்கினார். இந்த நிகழ்வில் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் சுந்தரவேல்,அக்பர்,கோபிநாதசிவம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, துணை ஆளுநர் பாபு ஜான், முன்னாள் மாணவர் தாரணி உதயகுமார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக பள்ளியின் முன்னாள் மாணவருமான சு.சிவசக்திவேலுக்கு புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக்குழு உறுப்பினர் சான்றிதழ் வழங்கி முதல்வர் சிவபிரகாசம் உள்ளிட்ட ஆசிரியர்கள் கௌரவித்தனர்.