புதுக்கோட்டை,சிவகங்கை மாவட்ட சம்பா மகசூலுக்கு தேவையான உரங்கள் வந்தடைந்தது

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்கு  நடப்பு சம்பா பயிர்  சாகுபடிக்காக  தேவையான உரங்கள் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம்  இன்று புதுக்கோட்டைக்கு வந்தடைந்தது.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து தயாரான உரங்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுக்காக யூரியா 422.550, டிஏபி 446.600,ஏபிஎஸ் 316.450,சூப்பர் ஜிஎஸ்எஸ்பி 127.700 என மொத்தம் 1313.300 மெட்ரிக் டன் உரங்கள் வந்தடைந்தது.  

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டுள்ள உரங்கள் சிவகங்கை மாவட்டத்திற்கு சில பகுதிகளுக்கும்,புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏனைய பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும் 400 மெட்ரிக் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் 913 மெட்ரிக் டன் உரங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது உரங்கள் இறக்கி ஏற்றப்படுவதை வேளாண்மை உர தர கட்டுப்பாட்டு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.