அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் 7 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழா

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கராயபுரம், நல்லனம், உட்கோட்டை, கல்லாத்தூர், ரெட்டிதத்தூர், அய்யூர் மற்றும் அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் 7 புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி  தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  முன்னிலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், குடிநீர் வசதிகள், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில்,  ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கராயபுரம் கிராமத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43.62 இலட்சம் மதிப்பீட்டில் கோட்டியால் – காடுவெட்டாங்குறிச்சி சாலை முதல் சிங்கராயபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, நல்லனம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.78.78 இலட்சம் மதிப்பீட்டில், நல்லனம் முதல் நாயகனைப்பிரியாள் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும்,  உட்கோட்டை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.121.18 இலட்சம் மதிப்பீட்டில் உட்கோட்டை  முதல்  மேட்டுப்பாளையம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும்,  போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட அலுலவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கல்லாத்தூர் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.126.67 இலட்சம் மதிப்பீட்டில் கல்லாத்தூர் முதல் கல்லேரி, இருதயபுரம், சலுப்பை வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர் ரெட்டிதத்தூர் கிராமத்தில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.229.87 இலட்சம் மதிப்பீட்டில் ரெட்டிதத்தூர் முதல் சூரப்பள்ளம், விளந்தை, தென்னூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து அழகாபுரம் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.224.15 இலட்சம் மதிப்பீட்டில் அழகாபுரம் முதல் விழுதுடையான் இராஜேந்திரபட்டினம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர், அய்யூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.47.70 இலட்சம் மதிப்பீட்டில் அய்யூர் ஊராட்சி வீரனார் கோயில் முதல் காசாம்பள்ளம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் 7 புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியினை  போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) மாது, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.