சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா 

சங்கரன்கோவில்  கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆண்டிற்கான நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் உள்ள கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வப்பிரியா தலைமை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, தகவல் தொழில்நுட்ப அணி ஜலால், ஆசிரியர் சங்கர்ராம், நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், செல்வராஜ், தொண்டரணி அப்பாஸ் அலி, வார்டு செயலாளர்கள் காளிசாமி பாண்டியன், தங்கவேலு, பாட்டத்தூர் ராமலிங்கம் மற்றும் வீரமணி, விராச்சாமி, சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.