புதுக்கோட்டை வைரம்ஸ் மெடரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாக் கொண்டாட்டம்

வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மழலையர் பிரிவு முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இளமழலையர் பிரிவு மாணவ, மாணவியர்கள் ராதை, கிருஷ்ணன் போல வேடமணிந்து வந்தனர். விழாவில் பள்ளியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, முதல்வர் முனைவர். எஸ்.ஏ.சிராஜுதீன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழா மகிழ்ச்சியுடன் இனிதே நடைபெற்றது.