புதுக்கோட்டையில் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கு போதிய ஊழியர்களை நியமித்திடுக சிஐடியு காத்திருப்புப் போராட்டம்

காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கு போதுமான ஊழியர்களை நியமித்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் இன்று இரண்டாவது நாளாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் எஸ்.யாசிந்த் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டு சம்மேளனப் பொதுச் செயலாளர் ஆத்மநாதன் கண்டன உரையாற்றினார். சிஐடிய மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், கே.ரெத்தினவேல், முகமதுகனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்த  அரசு தீர்மானித்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஊரியர்களை நியமிக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் குடிநீர் வடிகால் வாரியமும் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு அரசு தீர்மானித்த சம்பளத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.