மருத்துவ மாணவி பாலியல் படுகொலையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்ம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மன்னர் கல்லூரி நிர்வாகி தனுஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி, துணைத் தலைவர் வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர் மகாலெட்சுமி, நகரச் செயலாளர் சந்துரு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கல்லூரி கிளை நிர்வாகி பூவராகவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இரா.வசந்தகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஹரிராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.