திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் மஹா சனிப்பிரதோஷ விழா

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் மஹா சனிப் பிரதோஷவிழா வெகு சிறப்பாக இன்று நடை பெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற 18வகையான அபிஷேகம் செய்தனர்.

தொடர்ச்சியாக மூன்று முறை சாமி வீதிவுலாவுடன், தேவாரங்கள் பாடப் பெற்று மஹாதீபராதனை காண்பிக்கப்ட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, பூவரசக்குடி, வெண்ணாவல்குடி, கொத்தக்கோட்டை, மணியம்பலம், காயாம்பட்டி, அழகம்பாள்புரம், எஸ்.குளவாய்ப்பட்டி, கத்தக்குறிச்சி, தெட்சிணாபுரம், வேங்கிடக்குளம், தோப்புக்கொல்லை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள்; கலந்து கொண்டனர்.  வுpழாவிற்கான ஏற்பாடுகளை குருக்கள் வைத்தீஸ்வரன், ஸ்ரீராம், விஜய், ஞானஸ்கந்தன் மற்றும் பலர் செய்திருந்தனர்.