புதுகை வரலாறில் கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில்  சுதந்திர தின கொண்டாட்டம்

புதுகை வரலாறு தலைமை அலுவலகத்திலும்  ராஜகோபாலபுரம் மூன்றாம் வீதியில் உள்ள  லண்டன் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியிலும்  இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு  இன்று  புதுகை வரலாறு ஆசிரியரும்  புதுக்கோட்டை கிரவுன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவருமான  சு.சிவசக்திவேல்  மற்றும்  சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தி  குழந்தை செல்வங்களுக்கு  பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்வில் புதுக்கோட்டை பேஜ் நிறுவனர் முரளி, ரோட்டரி சங்கத்தின் மூத்த நிர்வாகிகள்  நடனம்,கமாலுதீன்,சுந்தரவேல்,பிரசாத்,ஸ்ரீராம், நாகராஜன், சோலைமணி,தங்கத்துரை, அக்பர் உள்ளிட்ட ஏராளமான  பங்கேற்றனர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் லண்டன் லுக் பள்ளியின் தாளாளர்  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி  வரவேற்றார்.  நிகழ்வில்  பெரியார் நகர்,  கம்பன் நகர்,  ராஜகோபாலபுரம்  பகுதி சார்ந்த பொது மக்கள்  ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.