திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு வரவேற்றார். தேசியக் கொடியை தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் ஏற்றி வைத்து சுதந்திர தின விழா உரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி இயக்குநர்கள் ம.சண்முகநாதன், ம.பிச்சப்பா, செயலர் மு.விஸ்வநாதன், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் சரவணக்குமார் நன்றி கூறினார்.