வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு “பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்” என்ற உறுதிமொழியோடு தொடங்கியது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மருத்துவர் முத்தமிழ்வீணா பங்கேற்று தேசியக் கொடியினை ஏற்றினார். அனைவரும் கொடிக்கு மரியாதை செலுத்தினர். இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினவிழா சிந்தனைகள் மற்றும் நாட்டு நலன் பற்றி பள்ளியின் முதல்வர் டாக்டர். எஸ்.ஏ.சிராஜுதீன் சிறப்புரை ஆற்றினார். இதில் பள்ளியின் தலைவர் தேனாள் சுப்ரமணியன், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் ஏ.ஆர்.எஸ்.சுப்ரமணியன், எஸ்.சீனிவாசன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, முதல்வர் முனைவர். எஸ்.ஏ.சிராஜுதீன், துணை முதல்வர் சுப்பிரமணியன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.